நீதித்துறை Notes 8th Social Science Lesson 22 Notes in Tamil

8th Social Science Lesson 22 Notes in Tamil

22. நீதித்துறை

“நீதித்துறையின் உயர்வே அரசாங்கத்தின் உயர்வைக் காட்டும் அளவீடாகும்”

அறிமுகம்

சட்டம்: இது மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ (அ) நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.

நீதித்துறை: சட்டப்படு, ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது.

இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி

அ) பண்டைய காலத்தில் நீதித்துறை

ஸ்மிருதி இலக்கியங்கள்

பண்டைய இந்தியாவில் ஸ்மிருதிகள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தன. அவை மனுஸ்மிருதி, நாரதஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி போன்றவையாகும்.

ஆ) இடைக்கால இந்தியாவில் நீதித்துறை

இ) நவீன இந்தியாவில் நீதித்துறை

நீதித்துறை மற்றும் அரசியலமைப்புச் சட்டம்

இந்தியாவில் நீதிமன்றங்களின் அமைப்பு

மாவட்ட நீதிமன்றங்கள்: மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

அமர்வு நீதிமன்றங்கள்: குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சாயத்து நீதிமன்றங்கள்: கிராம அளவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பஞ்சாயது நீதிமன்றங்கள் கையாளுகிறது.

வருவாய் நீதிமன்றங்கள்: வருவாய் நீதிமன்றங்கள் நில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது. இது நில வருவாயை நிர்ணயம் செய்து நில உரிமையாளர்களிடமிருந்து அதனை வசூலிக்கிறது.

லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்):

விரைவு நீதிமன்றங்கள்: இந்நீதிமன்றங்கள் 2000ஆம் ஆண்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கீழ் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டன.

தொலைதூர சட்ட முன்னெடுப்பு (Tele Law Initiative):

குடும்ப நீதிமன்றங்கள்:

நடமாடும் நீதிமன்றங்கள் (Mobile Court):

நடமாடும் நீதி மன்றங்கள் கிராமப்புற மக்களுக்கு இடர்களை தீர்க்கும் ஒன்றாய் இருக்கும். இது கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களது செலவைக் குறைத்து, அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வகை செய்கிறது.

இ-நீதிமன்றங்கள் (E –Courts):

இ-நீதிமன்றங்கள் திட்டம் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி அனைத்து நீதிமன்றங்களும் கணினி மயமாக்கப்படும். நீதித்துறை சேவை மையம் இ-நீதிமன்றத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நேரடியாக வழக்கு நிலை மற்றும் அடுத்த விசாரணை தேதிகளை கட்டணமின்றி கேட்டறியலாம்.

நீதித்துறையின் பங்கு

நீதித்துறையின் செயல்பாட்டினை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

தகராறுகளைத் தீர்வு செய்தல் பின்வருவனவற்றிற்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு இயக்கமுறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.
  • குடிமக்கள்
  • குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
  • இரண்டு மாநில அரசாங்கங்கள்
  • மத்திய, மாநில அரசாங்கங்கள்
நீதிமன்ற மறு ஆய்வு அதிகாரம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பினை மீறுகிறது என நீதித்துறை நம்பும் பட்சத்தில் அச்சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு உள்ளது.
சட்டத்தை நிலைநிறுத்துதல் மற்றும் அடிப்படை உரிமைகளை செயல்படுத்துதல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாய் நம்பும்பட்சத்தில் அவர் உச்சநீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ அணுகலாம்.

தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA):

இது 1987ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இது சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவிகள் வழங்குவதோடு பிரச்சனைகளுக்கு இணக்கமான தீர்வு காண லோக் அதாலத்தை ஏற்பாடு செய்கிறது.

இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். இது புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் படி உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராகவும், இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு

அ. முதன்மை அதிகார வரம்பு:

உச்சநீதிமன்றத்தில் மட்டுமே முதன்முறையாக தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. இது மத்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள் ஆகியன முதன்மை அதிகார வரம்புக்குள் அடங்கும்.

ஆ. மேல் முறையீட்டு அதிகார வரம்பு:

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது. அவ்வாறான வழக்குகள் மேல்முறையீட்டுக்கு தகுதியுள்ளது என உயர்நீதிமன்றத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இ. ஆலோசனை அதிகார வரம்பு:

குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி குறித்து ஆலோசனை வழங்கும் அதிகாரத்தினை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.

ஈ. நீதிப் பேராணை அதிகார வரம்பு:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32ன் படி உச்சநீதிமன்றமும் நீதிப் பேராணைகளை வழங்குகின்றன.

உ. ஆவண நீதிமன்றம்:

இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும் .

ஊ. சிறப்பு அதிகாரங்கள்:

இது கீழ் நீதிமன்றங்களின் செயல்பாட்டை கண்காணிக்கிறது.

உயர்நீதிமன்றம்

நீதித்துறையின் சுதந்திரமான மற்றும் நடுநிலைமை செயல்பாடு

வழக்கு செயல்முறை

இந்தியாவில் இரண்டு வகையான சட்டப்பிரிவுகள் உள்ளன. அவை உரிமையியல் சட்டங்கள் மற்றும் குற்றவியல் சட்டங்கள் ஆகும்.

உரிமையியல் சட்டங்கள் குற்றவியல் சட்டங்கள்
  • இது பணம், சொத்து மற்றும் சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது. எ.கா. நிலம் தொடர்பான பிரச்சினைகள், வாடகை, திருமணம் தொடர்பான பிரச்சனைகள்
  • உரிமையியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களால் ஒரு புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • மனுதாரரின் கோரிக்கையின்படி பணம் செலுத்தும்படியான தண்டனைகள் வழங்கப்படுகிறது.
  • குற்றம் என சட்டம் வரையறுக்கும் நடத்தைகள் அல்லது செயல்களை இது விசாரிக்கிறது. எ.கா, திருட்டு, கொலை, பெண்களைத் துன்புறுத்துதல் ஆகியன.
  • இது வழக்கமாக காவல்துறை விசாரணையுடன் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதன் மூலம் தொடங்குகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
  • குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட்டு குற்றம் சட்டப்பட்டவர் சிறைக்கு அனுப்பப்படுவார்.

பொது நலவழக்கு (Public Interest Litigation):

இது பொதுநலனைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கு ஆகும். உச்சநீதிமன்றம் இந்த முறையை அறிமுகப்படுத்தியது. இது ஒரு நபர் தனது வழக்கு தொடர்பான நீதிமன்றத்தை அணுக அனுமதிக்கிறது. அடிப்படை மனித உரிமைகள் மீறல், சமய உரிமைகள் , மாசுபாடு மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பொது நல வழக்கை எவரும் தாக்கல் செய்யலாம். இது தொடர்பான எழுதப்பட்ட புகார் கடிதம் மூலம் இவ்வழக்கினைப் பதியலாம், பொது நல வழக்கு என்ற கருத்து இந்திய நீதித்துறைக்கு புதிதான ஒன்றாகும்.

முடிவுரை

மக்களாட்சி நாட்டில் நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்பாளராகவும், அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் உள்ளது. உலகின் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட மக்களாட்சி நாடான இந்தியா, நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் சுதந்திரமான நீதித்துறை அமைப்பைக் கொண்டுள்ளது.

Exit mobile version