குடிமக்களும் குடியுரிமையும் Notes 8th Social Science Lesson 9 Notes in Tamil

8th Social Science Lesson 9 Notes in Tamil

9. குடிமக்களும் குடியுரிமையும்

அறிமுகம்

குடிமகனும் குடியுரிமையும்

குடியுரிமையின் வகைகள்

குடியுரிமை இரண்டு வகைப்படும்

1. இயற்கை குடியுரிமை : பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை.

2. இயல்புக் குடியுரிமை : இயல்யாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை.

இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955

இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை இச்சட்டம் கூறுகிறது.

குடியுரிமையை பெறுதல்

1. பிறப்பால் குடியுரிமை பெறுதல்

2. வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்

3. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்

4. இயல்புக் குடியுரிமை

ஒருவர் விண்ணப்பிப்பதன் மூலம் மத்திய அரசு அவருக்கு இயல்பு குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குகிறது.

5. பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை

எந்தவொரு வெளிநாட்டுப் பகுதியும் இந்தியாவுடன் இணையும் போது, இந்திய அரசு அப்பகுதி மக்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறது. அந்தகுறிப்பிட்ட நாளில் இருந்து அவர்கள் இந்திய குடிமக்களாகின்றனர்.

உதாரணமாக பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்தபொழுது, இந்திய அரசு அம்மக்களுக்கு 1962ல் இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியது.

இந்தியக் குடியுரிமையை இழத்தல்

குடியுரிமை இழப்பு பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.

குடியுரிமையை துறத்தல் (தானாக முன்வந்து குடியுரிமையைத் துறத்தல்)

ஒருவர் வெளி நாட்டின் குடியுரிமையை பெறும்பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.

குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)

ஒர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.

குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)

மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.

நாட்டுரிமை மற்றும் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்

இந்திய குடிமக்களின் உரிமைகளும், கடமைகளும்

இந்திய அரசியலமைப்புச்சட்டம் கீழ்க்கண்ட உரிமைகளை நமக்கு வழங்குகிறது.

இந்திய அரசியலமைப்பு 42வது சட்டத்திருத்தத்தின் படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

(உதாரணமாக : நேர்மையாக வரி செலுத்துதல், மற்றவர்களின் கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளித்தல், நாட்டின் பாதுகாப்பிற்காகச் செயலாற்றுதல், சட்டங்களை மதித்தல் மற்றும் கீழ்படிதல்)

ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை இரண்டு வகையினராக நாம் அழைக்கின்றோம் அவை:

1. அந்நியர் (Alien)

ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அந்நியர் எனப்படுவர்.

உதாரணம் : வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள்

2. குடியேறியவர் (Immigrant)

ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர் எனப்படுகிறார்.

நற்குடிமகனின் பண்புகள்

உலகளாவிய குடியுரிமை

வெளிநாட்டுவாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்)

முடிவுரை

நமது அரசியலமைப்புச் சட்டம் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் சம உரிமையை வழங்குகிறது. ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொருட்டு, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் நமது அரசியலமைப்பு ஊக்குவிக்கிறது.

Exit mobile version